எல்லையில் சண்டையா? அப்படி ஏதும் இல்லையே- பாக் இராணுவம் மறுப்பு

எல்லையில் சண்டையா? அப்படி ஏதும் இல்லையே- பாக் இராணுவம் மறுப்பு

அக்னூர் மற்றும் கேரன் செக்டார்களில் இந்திய இராணுவம் தாக்குதல் என்ற தகவலுக்கு பாக் இராணுவத்தின் செய்தி பிரிவு எப்போதும் போலவே மறுப்பு தெரிவித்துள்ளது.

நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் எந்த தாக்குதலும் நடைபெறவில்லை என்றும் பயங்கரவாத முகாம் என எதுவும் தாக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார் டிஐி ஐஎஸ்பிஆர் ஆசிப் கபூர்.

ஆனால் தேவா (Dewa) செக்டார் பகுதியில் இந்திய பகுதிகளை பாக் தாக்கியதாகவும் அதில் பல இந்திய நிலைகள் அழிக்கப்பட்டு இந்திய இராணுவத்திற்கு பயங்கர உயிரிழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆசீப் கபூர் தெரிவித்துள்ளார்.

ஆனால் மறுபுறம் பாக் பிரதமர் சர்வதேச நாடுகளிடம் இந்தியா தவறான நினைப்பில் தாக்குதல் நடத்த முனைவதாகவும், சர்வதேச சமூகம் இதை கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இந்தியா தவறான நினைப்பில் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க வேண்டிவரும் எனவும் இந்த பிரச்சனைக்கு பாக் பொறுப்பாகாது எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.