பந்திபோராவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு

பந்திபோராவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பந்திபோரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

ஞாயிறு அன்று இரவு தொடங்கிய நடவடிக்கையில் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஸ்ரீநகரில் இருந்து 55கிமீ தொலைவில் உள்ள லவ்தாரா கிராமத்தில் தான் சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பயங்கரவாதிகள் இருப்பு குறித்து இராணுவ வீரர்களுக்கு உளவு தகவல் கிடைத்த பின்பு வீரர்கள் அப்பகுதியை சுற்றிவளைக்க முயன்ற போது பயங்கரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கியால் சுடத் தொடங்கியதும் சண்டை ஆரம்பமானது.

வீழ்த்தப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் இன்னும் காணப்படாத நிலையில் சண்டை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.