60 காஷ்மீர் இளைஞர்கள் பயங்கரவாத இயக்கங்களில் இணைவதில் இருந்து மீண்ட இந்திய இராணுவத்தின் “ஆபரேசன் மா”
பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு இயங்கும் பயங்கரவாத இயக்கங்கள் காஷ்மீர் இளைஞர்களை குறிவைத்து நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகள் வழியாக பயங்கரவாத இயக்கங்களில் இணைய முயன்ற 60 காஷ்மீர் இளைஞர்களை கடந்த எட்டு மாதங்களில் “ஆபரேசன் மா ” எனும் திட்டத்தின் கீழ் இந்திய இராணுவம் மீட்டுள்ளது.
லெப் ஜென் தில்லான் அவர்கள் சினார் கார்ப்சின் (15 Corps) கமாண்டராக பதவியேற்ற பிறகு இந்த ஆபரசனை தொடங்கினார்.
பாக் பயங்கரவாத இயக்கங்களில் காஷ்மீர் இளைஞர்கள் இணைவதை தடுக்கவே இந்த ஆபரேசன் தொடங்கப்பட்டது.பாக் பயங்கரவாதிகள் காஷ்மீர் இளைஞர்களை மூளைச் சலவை செய்து பயங்கரவாத இயக்கங்களில் இணைய செய்வது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மீட்கப்பட்ட இளைஞர்களுக்கு இராணுவம் மறுவாழ்வு பணிகளையும் செய்து கொடுப்பது குறிப்பிடத்தக்கது.காஷ்மீரை அமைதியானதாக மாற்ற இராணுவம் தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.