இந்தியா மங்கோலியா போர்பயிற்சி-NomadicElephant2019
இந்தியா மங்கோலியா நாட்டு ராணுவங்கள் இணைந்து போர்பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.14வது முறையாக இரு நாடுகளும் இந்த பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.ஹிமாச்சலின் பக்லோ பகுதியில் நடைபெற்று வருகின்றன.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இணைந்து ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து இந்த பயிற்சி நடைபெற்று வருகிறது.
பயிற்சியின் போது பல்வேறு விதமாக நிகழ்வுகளை பாவித்து அதற்கான பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
இரவில் சுடுதல் மற்றும் சிறிய ரக ஆயுதங்களை கையாள்தல் போன்ற பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.