காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை ஆதரிக்கும் நாடுகள் ஏவுகணையால் தாக்கப்படும் என பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் பேசி இருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் மற்றும் கில்ஜித் பல்திஸ்தான் விவகாரங்கள் துறை அமைச்சராக இருப்பவர் அலி அமீன் கண்டப்பூர் (Ali Amin Gandapur). ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா உடனான பதற்றம் அதிகரிக்கும் பட்சத்தில், வலுக்கட்டாயமாக போரில் ஈடுபடும் சூழல் பாகிஸ்தானுக்கு ஏற்படும் என்றார்.
இந்தியாவை ஆதரிக்கும் நாடுகளை பாகிஸ்தான் எதிரியாக கருதும் என்று குறிப்பிட்ட அலி அமீன், இந்தியா மீதும், அதை ஆதரிக்கும் நாடுகள் மீதும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். அவரது பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
Polimer