Breaking News

பாக் சுட்டு வீழ்த்தியதாக கூறிய சுகாய் விமானம்; விமானப்படை தினத்தில் நேரில் வந்து அதிர வைத்த சம்பவம்

பாக் சுட்டு வீழ்த்தியதாக கூறிய சுகாய் விமானம்; விமானப்படை தினத்தில் நேரில் வந்து அதிர வைத்த சம்பவம்

பாக் சுட்டு வீழ்த்தியதாக கூறிய சுகாய் விமானம்; விமானப்படை தினத்தில் நேரில் வந்து அதிர வைத்த சம்பவம் நேற்று நிகழ்ந்தது.

விமானப்படை தினம் நேற்று வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்ட அனைவரும் அறிந்ததே.அதே நேரம் அது பாக் விமானப்படைக்கு ஒரு அதிர்ச்சியையும் அளித்து உலக அளவில் தலைகுணிவை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் பாலக்கோட் தாக்குதலுக்கு பதிலடி என பாக் விமானங்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய போது தாங்கள் ஒரு சுகாய் விமானத்தையும் சுட்டு வீழ்த்தியுள்ளோம் என பாக் கூறியது.ஆனால் நேற்று நடந்த விழாவில் சூட்டு வீழ்த்தியதாக கூறிய விமானம் கண்காட்சியில் கலக்கியது.

அவெஞ்சர்-1 எனப்படும் அந்த சுகாய் விமானத்தை தான் பாக் விமானப்படை சுட்டு வீழ்த்தியதாக கூறி அதற்கு நினைவு மண்டபம் வேறு அமைத்திருந்தது.இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் பாக் சுட்டுவீழ்த்தியபோது விமானத்தை இயக்கியதாக கூறிய அதே வீரர்கள் தான் நேற்றும் விமானப்படை தினத்தில் கலந்து கொண்டு விமானத்தை இயக்கினர்.

இது தவிர பாக்கின் எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்திய விங் கமாண்டர் அபி அவர்கள் மிக்-21 விமானத்தை இயக்கி வானில் பறந்தார்.

சேத்துலயும் அடி வாங்கியாச்சு சோத்துலயும் அடி வாங்கியாச்சு என்ற நிலை தான் தற்போது பாக்கிற்கு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.