Breaking News

ரபேலுக்கு சாஸ்த்ர பூஜா

ரபேல் விமானத்தை பிரான்சிடமிருந்து பெற்ற ராஜ்நாத் சிங், விமானத்திற்கு பொட்டு, பூக்கள் வைத்து ‘சாஸ்த்ர பூஜா’ நடத்தினார்.

இந்திய விமானப்படைக்கு வாங்கப்பட உள்ள 36 ரபேல் போர் விமானங்களில், முதல் விமானத்தை, பிரான்ஸ் சென்றுள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ( அக்.,8) பெற்று கொண்டார்.

நம் நாட்டில் நவராத்திரி பண்டிகையின் ஒரு பகுதியாக, ஆயுத பூஜையும் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, ரபேல் விமானத்தில், ‘சாஸ்த்ர பூஜா’ எனப்படும், ஆயுத பூஜையை, ராஜ்நாத் சிங் நடத்தினார்.

ரபேல் விமானத்திற்கு சந்தன பொட்டு வைத்து, முன் பகுதியில் தேங்காய், பூக்கள் வைத்து, ஓம் என்று  ராஜ்நாத் சிங் எழுதினார். ரபேல் விமானத்க்கு கயிறு கட்டிய பின், டயருக்கு அடியில் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்யப்பட்டது.

Dinamalar

Leave a Reply

Your email address will not be published.