நான்கு படைகளும் இணைந்து அந்தமானை பாதுகாப்பு குறித்த போர்பயிற்சி
Andaman and Nicobar Command (ANC) சார்பில் Defence of Andaman & Nicobar Islands 2019 (DANX-19) என்ற போர்பயிற்சி நடைபெற்றது.
அக்டோபர் 14 முதல் 18 வரை இந்த பயிற்சி நடைபெற்றது.இராணுவம்,விமானப்படை,கடற்படை மற்றும் கடலோர காவல் படை என நான்கு படைகளும் இணைந்து இந்த பயிற்சியை மேற்கொண்டனர்.
படைநகர்வு, field manoeuvres என அந்தமான் பாதுகாப்புக்கு பங்கம் விளைக்கும் காரணிகளை தடுக்க பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
போர்க்கப்பல்கள்,விமானங்கள்,சிறப்பு படைகள் மற்றும் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள Armed Forces Special Operations Division (AFSOD) ஆகியவை இந்த பயிற்சியில் பங்கேற்றன.