Breaking News

ஜம்மு காஷ்மீர் : பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு -பெண் ஒருவர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதல்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் உயிரிழப்பதுடன் எல்லையோர கிராமங்களில் வாழும் இந்திய மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாலை அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், பாகிஸ்தான் ராணுவம் மூன்று முறை அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.