கூடங்குள் அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல்
கூடங்குளம் அணு மின் நிலையம் இணைய வழியால் தாக்கப்பட்டு முக்கிய ரகசியங்கள் கசிந்தது, இரண்டு ஆலைகள் நிறுத்தப்பட்டது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தின் கணிப்பொறிகளை ஹாக் செய்து ஊடுருவிய ஹாக்கர்கள் அணு மின் நிலையத்துக்கு கடும் சேதம் ஏற்படுத்தியதோடு, இரண்டு அணு உலைகளை செயல்படாமல் வைத்துள்ளனர்,
அதே நேரம், முக்கிய தகவல்களாக அங்கு வேலை செய்பவர்களின் தகவல்கள், ஆராய்ச்சியாளர்களின் தகவல்கள், பாதுகாப்பு பற்றிய ரகசியங்கள், கட்டுப்பாட்டு அமைப்பின் தகவல்கள், மற்றும் அனைத்து வித தினசரி செயல்பாடுகள் குறித்த தகவல்களையும் திருடியுள்ளனர், இவை டார்க் வெப் என்னும் ரகசிய இணையதளங்களில் விற்பனைக்கு உள்ளதாகவும் தெரிகிறது.
இதுபோன்ற சைபர் தாக்குதலை ரஷ்யா, ஈரான் போன்ற பல நாடுகள் எதிர்கொண்டுள்ளன, இந்த தாக்குதல்களால் அணு உலை நிறுத்தம் மற்றும் அங்கு வேலை செய்யும் ஆராய்ச்சியாளர்களின் மர்மமான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
அரசுக்கு ஏற்கனவே இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது, அரசிடமிருந்து கூடிய விரைவில் அறிக்கையும் எதிர்பாக்கலாம்