எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் – பல வீடுகள் சேதம்

ஜம்மு- காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில், வீடுகள் பல சேதமடைந்தன.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. நேற்று எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு, தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம், பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்று, அவர்களது பதுங்கு குழிகளை அழித்தது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 6 முதல் 9 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், நேற்று குப்வாரா மாவட்டத்துக்கு உட்பட்ட தங்தார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பகுதி வீடுகள் பல இடிந்து சேதமடைந்தன.
Polimer

Leave a Reply

Your email address will not be published.