Breaking News

Day: October 4, 2019

காஷ்மீர் குறித்த மலேசிய பிரதமரின் ஐ.நா பேச்சுக்கு இந்தியா கடும் எதிர்வினை

October 4, 2019

காஷ்மீர் இந்தியாவால் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத் பேசியதற்கு இந்தியா எதிர்வினையாற்றியுள்ளது. இருநாடுகள் இடையே இருக்கும் நட்புறவைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. காஷ்மீர் விவகாரம் தொடர்பான ஐ.நாவின் தீர்மானம் உள்ள போதிலும், அப்பகுதி வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று மகாதீர் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 74ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் பேசியிருந்தார். பிற சமஸ்தானகளைப் போலவே காஷ்மீரும் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபின்னரே இந்தியாவுடன் இணைந்தது; பாகிஸ்தான் […]

Read More

பாலகோட் தாக்குதல்: “நமது ஹெலிகாப்டரை நாமே சுட்டு வீழ்த்தியது மிகப் பெரிய தவறு” – இந்திய விமானப்படை தளபதி

October 4, 2019

பாலகோட் தாக்குதல் சம்பவம் நடந்த மறுநாள் ஜம்மு, காஷ்மீரில் இந்திய விமானப்படை வான்பாதுகாப்பு அமைப்பு அதற்கு சொந்தமான ஹெலிகாப்டர் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவத்தில் ஆறு விமானப்படை வீரர்கள் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர். இந்திய விமானப்படை விமானம் ஒன்றில் இருந்து வந்த ஏவுகணைதான் பிப்ரவரி 27 அன்று அந்த எம்.ஐ -17 ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய […]

Read More

இராணவத்திற்கு ஒரு மில்லியன் கண்ணிவெடிகள் தேவை

October 4, 2019

இராணவத்திற்கு ஒரு மில்லியன் கண்ணிவெடிகள் தேவை எல்லைக் கோட்டு பகுதியில் ( Line of Control ) பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க  anti-personnel mines எனப்படும் கண்ணிவெடிகள் ஒரு மில்லியன் என்ற அளவில் தேவையாக உள்ளது.இதற்காக தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தம் மட்டும் கையெழுத்தாகும் பட்சத்தில் ஒரே ஆர்டரில் இவ்வளவு கண்ணிவெடிகள் வாங்குவது இதுவே முதல் முறையாகும். தற்போது எந்த தனியார் நிறுவனமும் கண்ணிவெடிகள் தயாரிக்கவில்லை.தற்போது இராணுவம் உபயோகப்படுத்தும் கண்ணிவெடிகளை  Ordnance Factory Board (OFB) […]

Read More

நீர்மூழ்கி ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக வடகொரியா அறிவிப்பு

October 4, 2019

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவித் தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. புஹுசாங்-3 (Pukguksong-3) எனப்படும் இந்த நீர்மூழ்கி ஏவுகணை, வடகொரியாவில் வோன்சன் நகருக்கு அருகே கடற்பகுதியில் சோதித்துப் பார்க்கப்பட்டதை தென்கொரிய ராணுவமும் உறுதிப்படுத்தியுள்ளது. வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை முறியடிக்கவும், பாதுகாப்பை வலுப்படுத்தவும் இந்த சோதனை நடத்தப்பட்டதாக வடகொரியா கூறியுள்ளது. 2018ஆம் ஆண்டில் அமெரிக்காவுடன் பேச்சு நடத்தத் தொடங்கிய பிறகு, வடகொரியா மேற்கொண்டவற்றில் மிகவும் ஆத்திரமூட்டக் கூடிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. கண்டம் விட்டு […]

Read More

இந்திய ராணுவத்தில் இணைந்த இஸ்ரேல் நவீன ஏவுகணை

October 4, 2019

டாங்குகளை தாக்கி அழிக்கும், இஸ்ரேலில் தயாரான அதிநவீன ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டன. ISRAEL Spike anti tank missile  பெயரிடப்பட்ட, டாங்குகளை தாக்கி அழிக்கும் இந்த ஏவுகணைகள், பாகிஸ்தான் எல்லையை ஒட்டி நிறுத்தப்பட உள்ளன. அவசர தேவையை கருத்தில் கொண்டு, இந்த ஏவுகணைகளை குறைந்த அளவு கொள்முதல் செய்ய ராணுவம் திட்டமிட்டு உள்ளது. டிதயாரித்து வரும் அதிநவீன ஏவுகணைகள் தயாராகும் வரை இஸ்ரேல் ஏவுகணைகள் பயன்படுத்தப்படும்.பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அவசர தேவையை கருத்தில் கொண்டு, […]

Read More

இந்தியா-பாகிஸ்தான் அணுஆயுதப் போர் நடந்தால் 12.5 கோடி மக்கள் கொல்லப்படுவார்கள்: ஆய்வில் தகவல்

October 4, 2019

இந்தியாவும் பாகிஸ்தானும் அணுஆயுதப் போரில் ஈடுபட்டால் 12.5 கோடிமக்கள் உடனடியாக பலியாகக் கூடும், மேலும் இதனால் உலகம் திடீர் சுற்றுச்சூழல் மாற்றங்களுக்குத் தள்ளப்பட்டு உலகளாவிய காலநிலை பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ரட்ஜர்ஸ் பல்லைக்கழகமும் நியூ நியூ பிரன்சுவிக் நிறுவனமும் இணைந்து ஈடுபட்ட ஆய்வின் முக்கிய அம்சங்களை ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது. சயின்ஸ் அட்வான்சஸ் வெளியிட்டுள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: “போரில் வீசப்படும் இதுபோன்ற வெடிகுண்டுகள் குறிவைக்கப்படக் கூடிய […]

Read More

வீரமரணம் அடைந்தும் எல்லையை காக்கும் வீரர் பாபா ஹர்பஜன் சிங்

October 4, 2019

வீரமரணம் அடைந்தும் எல்லையை காக்கும் வீரர் பாபா ஹர்பஜன் சிங் இந்திய சீன எல்லையில் அமைந்திருக்கும் நாதுலா என்ற கணவாயை இன்று வரை சீனாவிடமிருந்து பாதுகாத்துவருவதும், சீன வீரர்களை நடுங்கவைத்துக்கொண்டிருப்பதும் எது தெரியுமா? சாதாரண இந்திய சிப்பாய் ஒருவரின் ஆவி.(அவ்வாறு தான் கூறுவார்கள்.அந்த பகுதிக்கு வேலைக்கு செல்லும் வீரர்கள் இவரை வணங்காமல் செல்லமாட்டார்கள்) அந்த ஆவிக்குச் சொந்தக்காரர் ‘பாபா ஹர்பஜன் சிங்’. இங்குள்ள இராணுவ வாகனங்களில் எல்லாம் இவருடைய படத்தினைக் காணலாம். ஹர்பஜன் சிங் பஞ்சாப்பில் 1946-ஆம் […]

Read More