காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் விரட்டியடிக்கப்பட்டனர். ரஜோரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
சுந்தர்பனி, நவ்ஷேரா ஆகிய பகுதிகளில், நேற்று காலை சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் குண்டுகள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு, இந்திய ராணுவம் உடனடியாக பதிலடி கொடுத்தது.
இதேபோல் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா காட்டி, பூஞ்ச் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் உடனடியாக பதிலடி கொடுத்தது. இதனால் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் ஓட்டம் பிடித்ததாக இந்திய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
Polimer