பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அதற்கு முன்பு தீவிரவாதத்தை ஒடுக்க அந்நாடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஆனால் பாகிஸ்தான் அது குறித்த எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சந்திப்பின் போது டிரம்ப் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சு வார்த்தை நடத்த வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்துள்ள இந்திய அரசு, அல்கொய்தாவுக்கு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு பயிற்சி அளித்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானே கூறியுள்ளதை சுட்டிக் காட்டினார். பாகிஸ்தான் தீவிரவாதத்தை பிரதமர் மோடி பார்த்துக் கொள்வார் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளது அவர் இந்தியாவை நன்கு புரிந்துக் கொண்டு தெரிவித்த கருத்து என்றும் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
பாலிமர்