இந்தியா-பாகிஸ்தான் போருக்கு வாய்ப்பு : இம்ரான்கான் சொல்கிறார்

காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இம்ரான் கான் கூறியுள்ளார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியதைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

பதற்றத்தை தணிக்குமாறும், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

இருப்பினும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், போர் மூளும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

80 லட்சம் மக்களும் திறந்தவெளி சிறையில் வைக்கப்பட்டு இருப்பது, இந்த காலத்தில் முன்எப்போதும் இல்லாதது ஆகும். ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டால் என்ன நடக்குமோ என்பதுதான் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. அத்தகைய சூழ் நிலையில், ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த இரு அணு ஆயுத நாடுகளும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

Thanthi

Leave a Reply

Your email address will not be published.