பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் கடும் ஷெல் தாக்குதல்
காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி ஒட்டியுள்ள எல்லைக் கோடு பகுதியில் பாகிஸ்தான் கடும் மோர்ட்டார் தாக்குதலை தொடங்கியுள்ளது.
பூஞ்சின் பாலகோட் செக்டாரிலும் ராஜோரியின் நௌசேரா செக்டாரிலும் பாக் படைகள் சிறிய ரக மோர்ட்டார்களை வீசி கடும் தாக்குதல் நடத்தியுள்ளன.
இதற்கு தக்க முறையிலேயே இந்திய படைகள் பதிலடி கொடுத்துள்ளன.
நேற்று இரவு 8 மணி முதல் 10மணி வரை நௌசேரா செக்டாரில் தாக்குதலை நடத்தியுள்ளன.இதே போல பாலக்கோட் செக்டாரில் 11.45 pm to 2 am வரை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்திய தரப்பில் உயிரிழப்புகள் ஏதுமில்லை.இந்த வருடம் மட்டும்
2,050 முறை பாக் தாக்குதல் நடத்தியுள்ளது.இதில் 21பேர் உயிரிழந்துள்ளனர்.