இந்திய ராணுவ நிலைகள், கிராமங்கள் மீது பாக். படையினர் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச்சில் எல்லைக் கட்டுப்பாடுகோடு பகுதியில் இருக்கும் இந்திய ராணுவ நிலைகள் மற்றும் கிராமங்கள் மீது பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பாலகோட், மாங்கோட்  பகுதிகளில் காலை 10 மணியளவில் பாகிஸ்தான் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர்.
அங்குள்ள ராணுவ நிலைகளையும் கிராமங்களையும் குறிவைத்து சிறிய ரக பீரங்கிகள் மூலம் குண்டுகளை வீசி தாக்கியதுடன், துப்பாக்கிகளாலும் சுட்டனர். இதையடுத்து அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக கடைசியாக அங்கிருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் தாக்குதலில் கிராம மக்கள் தரப்பில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று பூஞ்ச் காவல்துறை இணை ஆணையர் ராகுல் யாதவ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.