வீரர்களே தயாராக இருங்கள்.. ராணுவ வீரர்களிடம் அஜித் தோவல் அறிவுறுத்தல்..!

பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கும்படி ராணுவ வீரர்களிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீநகரில் பாதுகாப்பு நிலவரத்தை ஆய்வு செய்ய 2 நாள் பயணமாக சென்றுள்ள அவர் ராணுவ உயர் அதிகாரிகள், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். சட்டம்ஒழுங்கு நிலவரத்தையும் அவர் ஆய்வு செய்தார். காஷ்மீரில் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
காவல்துறையும், துணை ராணுவப் படையினரும் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்துமாறும் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை தேடிப்பிடித்து வேட்டையாடும் படியும் அஜித் தோவல் உத்தரவிட்டார்.
தீவிரவாத அச்சுறுத்தல் இல்லாமல் சராசரி மக்கள் இயல்பான வாழ்க்கையை அச்சமின்றி வாழ்வதை உறுதி செய்யுமாறு பாதுகாப்பு படைகளுக்கு அவர் ஆலோசனைகள் வழங்கினார்.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 60 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவியிருப்பதாக கருதப்படுகிறது. இந்நிலையில் தீவிரவாதிகள் குறித்து முழு எச்சரிக்கையுடன் செயலாற்றும்படி அஜித் தோவல் இந்திய படைகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
Polimer

Leave a Reply

Your email address will not be published.