அஸ்திரா ஏவுகணை மீண்டும் வெற்றிகரமாக சோதனை
இந்தியாவின் டிஓர்டிஓ மேம்படுத்தி வரும் அஸ்திரா ஏவுகணை மீண்டும் ஒரு முறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
வான் இலக்குகளை சுட்டு வீழ்த்தக்கூடிய விமானத்தில் இருந்து ஏவப்படும் ஏவுகணை தான் இந்த அஸ்திரா.சுமார் 100கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை அழிக்கும் இந்த ஏவுகணை இந்தியாவின் சொந்த தயாரிப்பு ஆகும்.
மேற்குவங்கத்தில் உள்ள விமான தளத்தில் இருந்து பறந்த சுகாய் விமானம் அஸ்திரா ஏவுகணையை ஏவி சோதித்துள்ளது.
சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.