அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் கந்தேரி, இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று ஐஎன்எஸ் கந்தேரி நீர்மூழ்கிக் கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்தார். 1500 டன்னுக்கும் அதிக எடை கொண்ட, டீசல் அல்லது பேட்டரியில் இயங்கக் கூடிய, தாக்குதலுக்கு பயன்படும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஸ்கார்ப்பீன் ரகத்தை சேர்ந்தவை. இந்த ரகத்தை சேர்ந்த முதல் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் கல்வாரி (INS Kalvari), இந்திய கடற்படையின் பயன்பாட்டுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு […]
Read Moreஅண்டை நாட்டு பயங்கரவாதிகள், இந்திய கடலோர பகுதியில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தும் வாய்ப்பை மறுக்க முடியாது என்று ராஜ்நாத் சிங் கூறினார். கேரள மாநிலம் கொல்லத்தில், மாதா அமிர்தானந்தமயி தேவியின் 66-வது பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று நடந்தது. அதில், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:- நான் உள்துறை மந்திரியாக இருந்தபோது, காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தாக்குதல் நடந்தது. அதில் பலியான வீரர்களின் தியாகத்தை யாரும் மறக்க முடியாது. வீரர்களின் தியாகத்தை நினைவில் […]
Read Moreபயங்கரவாதிகள் பாகிஸ்தான் மண்ணில் இருப்பதை இம்ரான்கானால் மறுக்க முடியுமா? என்று இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது. ஐநா பொதுச்சபை கூட்டத்தில் இம்ரான் கான் பேசியதற்கு பதில் உரையாக இந்தியாவின் வெளியுறவுத்துறை முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா பேசியதாவது:- ஐநா சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நபருக்கு பென்சன் அளிக்கும் ஒரே நாடு தாங்கள்தான் என்பதை பாகிஸ்தான் ஒப்புக்கொள்ளுமா? அணு ஆயுத போர் வெடிக்கும் என்று இம்ரான் கான் மிரட்டுவது சிறந்த நிர்வாகிக்கான தகுதி இல்லை. தனது வாக்குறுதியை உறுதிப்படுத்தும் வகையில், […]
Read Moreபஞ்சாப் மாநிலத்திற்கு பாகிஸ்தானால் அனுப்பிவைக்கப்பட்ட மேலும் ஒரு ஆளில்லா குட்டி விமானம் கைப்பற்றப்பட்டுள்ளது. எல்லையில் ஊடுருவிய கைதான தீவிரவாதியிடம் போலீசார் நடத்திய விசாரணையை அடுத்து அவன் அளித்த தகவலின்படி பஞ்சாப் மாநிலத்தில் விழுந்துக் கிடந்த பாகிஸ்தான் நாட்டு ஆளில்லாத விமானத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்திய எல்லையான அட்டாரியில் விழுந்துக் கிடந்த அந்த டிரோன் விமானம் பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகளுக்கு பத்து கிலோ எடை கொண்ட வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக் கொண்டு வந்ததாக கருதப்படுகிறது. கடந்த 10 நாட்களில் […]
Read Moreகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக வெளியான தகவலால், ராணுவ நிலைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஸ்ரீநகரில் உள்ள ராணுவ முகாம்கள், ராணுவ நிலைகள் உள்ளிட்ட ராணுவ இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லை பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை போன்றவற்றுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. போலீஸ் நிலையங்களுக்கும் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், ஸ்ரீநகரை […]
Read Moreஇந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே அணு ஆயுத போர் வெடித்தால், அதற்கு ஐ.நா. சபையே பொறுப்பு என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா.சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றினார். இந்தியா மீதும், பிரதமர் மோடி மீதும் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அவர், பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின்னர் இந்தியாவுடன் நல்லுறவை பேண முயற்சிகள் மேற்கொண்டதாகக் கூறினார். ஆனால், இந்தியா அதனை புறந்தள்ளிவிட்டதாக விமர்சித்தார். காஷ்மீரில் அரசியல் […]
Read Moreஇந்திய இராணுவ டேங்குகளுக்காக இரவில் பார்க்கும் கருவிகளை மேம்படுத்தியுள்ள DRDO இந்தியாவின் Defence Research and Development Organisation (DRDO) உள்நாட்டிலேயே சொந்தமாக Thermal Imaging மற்றும் Day Sight equipment-களை மேம்படுத்தியுள்ளது.இந்திய இராணுவத்தில் உள்ள டேங்குகளுக்காக இந்த பார்க்கும் கருவிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.இது டேங்கர்களுக்கு sharper night vision-ஐ கொடுக்கும். T-72 மற்றும் T-90 tank-களில் இந்த இரவில் பார்க்கும் கருவி பொருத்தப்படும்.கரும் இருட்டிலா கூட தெளிவான பார்வையை இந்த கருவிகள் வழங்கும்.தற்போது உள்ள கருவியை விட […]
Read More