மியான்மர் இராணுவத்திற்கு டாடா சபாரி ஸ்டோர்ம் GS-800 வழங்கியது டாடா நிறுவனம்
இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா பல்வேறு இராணுவம் தொடர்பான வண்டிகளை மேம்படுத்திவருகிறது.அதை பரவலான நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறது.
அந்த வரிசையில் தற்போது முதல் தொகுதி சபாரி ஸ்டோர்ம் வண்டிகளை மியான்ர் நாட்டிற்கு வழங்கியுள்ளது.
இவை தவிர வெவ்வேறு வகையான வாகனங்களை அந்த நாட்டிலேயே தயாரித்து அந்நாட்டு இராணுவத்திற்கு வழங்கி வருகிறது.
இதற்கு முன் குறிப்பிடத்தக்க அளவு பீல்டு ஆம்புலன்ஸ் வாகனங்களை மியான்மர் நாட்டிற்கு வழங்கியுள்ளது.
இந்தியா மியான்மர் உறவு வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்க ஒன்று ஆகும்.