25 நாளில் 220 முறை அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்
ஆர்ட்டிகிள் 370 சட்டம் ரத்தாகிய பின்பு மட்டும் பாகிஸ்தான் 220 முறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூடுகளை பயன்படுத்தி பாக் பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் நுழையச் செய்ய முயற்சிகள் செய்து வருகிறது.
இராணுவம் 10 முதல் 12 முறை பயங்கரவாதிகள் ஊடுருவலை முறியடித்துள்ளது.பயங்கரவாதிகள் பயங்கராத முகாம்களில் இருந்து இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தான் உதவி செய்கிறது.
இந்த மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மட்டும் எல்லையின் பல்வேறு நிலைகளை குறிவைத்து 49 முறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.மொத்தமாக 271 சம்பவம் நடைபெற்று இந்த வருடத்தில் இரண்டாவது அதிகபட்சமாக உள்ளது.கடந்த ஜீலையில் 296 முறை தாக்கியுள்ளது.