Breaking News

Lt.பல்வான் சிங் அவர்களின் வெற்றி வரலாறு

Lt.பல்வான் சிங் ,மகா வீர் சக்ரா
Lt.பல்வான் சிங் (தற்போது கலோனலாக உள்ளார்).
மிக முக்கியத்துவம் வாய்ந்த டைகர் மலைப்பகுதியை மீட்பது இராணுவத்தின் முக்கிய பிரச்சனை.கார்கிலின் மையம் என கூட கொள்ளலாம்.மூன்று பக்கம் தாக்குதல் நடத்தும் உக்தி மேற்கொள்ளப்பட்டது. அதே போல் லெட் பல்வானின் கிரானேடியர் பிரிவும் அனுப்பப்பட்டது.
கடினமான ,கடுமையாக நடத்தப்பட்ட போரில் திறமையோடு போரிட்டார்.அப்போது அவர் படையில் இணைந்து வெறும் மூன்று மாதமே ஆகியிருந்தது.மேலே சென்று பாக் பங்கர்களை தகர்த்தார்.
நெருங்கிய போரில் நான்கு பாக் வீரர்களின் கதை முடித்தார்.டைகர் வீழ்ந்தது.
கலவையான உணர்வுடன் வீரர்கள் வீடு திரும்பினர்.போரில் வெற்றி மறுபக்கம் என்றாலும் தனது சகாக்களை இழந்தது பெரும் சோகமே தான். சில நாட்களுக்கு முன் பல்வான் சிங் புகைப்பிடிக்கும் படம் செய்தியாளர்களுக்கு கிடைத்தது.அதை பிரசுரமும் செய்தனர்.
சோகமாக இந்த விசயத்தை கமாண்டிங் ஆபிசரிடம் சொன்னார் பல்வான் சிங்.தன் அப்பா இதைப் பார்த்திருப்பார்.எனக்கு வீடு போக பிடிக்கவில்லை என கூறினார்.வெடித்த சிரிப்புடன் கமாண்டிங் ஆபிசர் பல்வான் சிங்கின் அப்பாவிடம் நடந்ததை கூற, தன் மகனால் பெருமை அடைந்த அந்த அப்பா ஒரு பாக்கெட் சிகரெட் பாக்கெட் கொடுத்து தனது மகனை வீட்டுக்கு அழைத்து சென்றார்.
போரில் காட்டிய வீரதீர சாகசம் காரணமாக அவருக்கு மகா வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.