எல்லையில் பாக் கடும் தாக்குதல்-ஒரு இந்திய வீரர் வீரமரணம்
எல்லைக் கோட்டு பகுதியில் பாக் இராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்திய இராணுவமும் பதிலுக்கு கடும் தாக்குதல் நடத்தி கடும் சேதம் ஏற்படுத்தியுள்ளது.
சில நிலைகள் தகர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடைபெற்ற சண்டையில் நாய்க் கிரிஷன் லால் அவர்கள் வீரமரணம் அடைந்துள்ளார்.அவருக்கு 34 வயது தான் ஆகிறது.அவர் ஜம்முவைச் சேர்ந்தவர்.
கிடைத்த தகவல்படி இரு பாக் வீரர்களும் கொல்லப்பட்டதாக தகவல்.