ஈரான் வான்பரப்பை தவிர்க்கும் இந்திய விமானங்கள்

அமெரிக்க ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியதை அடுத்து இந்திய விமான நிறுவனங்களும் ஈரான் வான்பரப்பை முற்றிலும் தவிர்ப்பதாக முடிவெடுத்துள்ளன.

ஈரானின் வான் பரப்பில் பறந்த அமெரிக்காவின் கண்காணிப்பு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதையடுத்து ஈரான் வான்பரப்பில் நேவார்க்கில் இருந்து மும்பை வந்து செல்லும் விமானங்களின் சேவையை அமெரிக்காவின் யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவனம் ரத்து செய்தது.

இதேபோல் மேலும் சில அமெரிக்க ஜப்பானிய நிறுவனங்கள் ஈரான் வான்பரப்பை தவிர்ப்பதாக அறிவித்தன. இந்நிலையில், இந்திய விமான நிறுவனங்கள் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகத்துடன் இணைந்து ஆலோசித்த பின், ஈரானிய வான்பரப்பு வழியாக பயணிக்கும் விமானங்களை பாதை மாற்றி இயக்குவதாக அறிவித்துள்ளது.

இதேபோல் ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஆலோசனை மேற்கொண்ட எத்தியாட் ஏர்வேஸ் நிறுவனமும், ஈரான் வான்பரப்புக்கு பதில் மாற்றுப் பாதையை தேர்வு செய்வதாக அறிவித்துள்ளன. 

Leave a Reply

Your email address will not be published.