நோயால் அவதிப்பட்ட சிறுவனை சுமந்து சென்ற கோப்ரா வீரர்கள்
சத்தீஸ்கர் மாநிலத்தில் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை சிஆர்பிஎப் வீரர்கள் 8 கி.மீ தங்கள் தோளில் சுமந்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.
அந்த மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் 13 வயது சிறுவனுக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது. சரியான சாலை வசதியும் இல்லாததால் சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் சிறுவன் அவதிப்பட்டு வந்தார்.
இதனிடையே அந்த கிராமம் வழியே ரோந்து பணியில் ஈடுபட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் இந்த தகவல் அறிந்த தும், தூக்கு படுக்கை கட்டி, அந்த சிறுவனை, தங்கள் தோளில் சுமந்து சென்றனர்.
சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரம் அவர்கள் சிறுவனை சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். எவ்வித எதிர்ப்பார்ப்புமின்றி சிறப்பான செயலை செய்த வீரர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.