Breaking News

AN 32 விமானத்தை தேட சென்னையில் இருந்து பறந்தது கடற்படையின் பி-8ஐ விமானம்

அசாமிலிருந்து புறப்பட்டு சென்ற இந்திய விமானப்படை விமானம் 13 பேருடன் மாயமானது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன் – 32 விமானப்படை பயணிகள் விமானம் அசாமின் ஜோர்காட்டிலிருந்து 12:24 மணிக்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் 5 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் இருந்தனர். அருணாச்சல பிரதேச மாநிலத்தில் தரையிறங்க வேண்டிய விமானம் ரேடார் இணைப்பில் இருந்து விலகியுள்ளது. மதியம் 1 மணியிலிருந்து விமானம் தொடர்பை இழந்துள்ளது. இதனையடுத்து விமானப்படை விமானங்கள் விமானத்தை தேடும் பணியை தொடங்கியுள்ளது. சுகோய் 30, சி 130 விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து 29 பேருடன் இதே ரக விமானம் புறப்பட்டு சென்ற போது மாயமானது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது  காணாமல் போன ஏஎன்-32விமானத்தை தேடும் பணிக்காக
சென்னை அரக்கோணத்தில் இருந்து கடற்படையின்  P-8I விமானம் பறந்தது.

பெரிய அளவிலான தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.