மசூத் அசாரை பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு தெரிவித்திருந்த எதிர்ப்பை திரும்பப் பெற பாகிஸ்தான் முடிவு?

மசூத் அசாரை பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு தெரிவித்திருந்த எதிர்ப்பை திரும்பப் பெற பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒசாமா பின்லேடனின் நெருங்கிய நண்பராக மசூத் அசார் இருந்தார். 1999-ம் ஆண்டு காந்தகாரில் இந்திய விமானத்தை பயங்கரவாதிகள் கடத்தி பயணிகளை பிணைக்கைதிகளாக வைத்து மிரட்டியதால் இந்திய சிறையில் இருந்து மசூத் அசார் விடுவிக்கப்பட்டார்.

பின்னர் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை அவர் உருவாக்கினார். இந்தியாவில் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல், உரி மற்றும் பதான்கோட் ராணுவ முகாம் மீது தாக்குதல் உள்பட தற்போது நடந்த புல்வாமா தாக்குதல் வரை இந்த பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலில் புதிய தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன.

இந்நிலையில், மசூத் அசாரை பயங்கரவாத குற்றவாளியாக அறிவிப்பதற்கு தெரிவித்திருந்த எதிர்ப்பை திரும்பப் பெற, பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Thanthi

Leave a Reply

Your email address will not be published.