இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் வீர தீர செயல்கள் பள்ளி பாடப் புத்தகங்களில் இடம் பெறவுள்ளதாக ராஜஸ்தான் மாநில கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்திய விமானப் படை வீரர் அபிநந்தனுக்கு நாடு முழுவதுமிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அவரை மேலும் கெளரவப்படுத்தும்விதமாக அவரது வீர தீர சாகச செயல்களை, பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம்பெறச் செய்யவுள்ளதாக ராஜஸ்தான் மாநில கல்வித்துறை அமைச்சரான கோவிந்த் சிங் தோதாஸ்ரா தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளுடனான மோதலில் இன்னுயிரை தியாகம் செய்த […]
Read Moreஎங்களது கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற இந்திய நீர்மூழ்கி கப்பலின் முயற்சியை முறியடித்து விட்டோம் என பாகிஸ்தான் கப்பற்படை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் கப்பற்படை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், எங்கள் கடல் எல்லைக்குள் இந்திய நீர்மூழ்கி கப்பல் ஒன்று நுழைய முயன்றது. இதனை பாகிஸ்தான் கப்பற்படை தனித்திறனுடன் முறியடித்து விட்டது என தெரிவித்துள்ளது. இதனுடன் நேற்று இரவு 8.35 மணியளவில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு உள்ளது. இதனை உண்மையான புகைப்படம் என்று தெரிவித்து உள்ளது. இந்திய […]
Read Moreசவால்கள் இன்னும் முடியவில்லை பதிலடி தர தயாராக இருங்கள் என படையினரை சந்தித்த பாகிஸ்தான் தளபதி, அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் விமானப்படை தளபதி முஜாகித் அன்வர் கான், நேற்று எல்லைப்புற ராணுவ முகாம்களுக்கு நேரில் சென்றார். அங்கு ராணுவ, விமானப்படை வீரர்களையும், ஊழியர்களையும் சந்தித்து பேசினார். பின்னர், அவர்களிடையே பேசுகையில் விமானப்படை தளபதி கூறியதாவது:- சமீபத்தில் எதிரியுடனான மோதலின்போது, நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க பாகிஸ்தான் விமானப்படை சிறப்பாக […]
Read More