பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத பயிற்சி முகாம்களில் இருந்து வாங்கப்பட்ட 80 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருளை கேஸ் சிலிண்டருக்குள்ளும், நிலக்கரி சாக்குப்பைகளிலும் வைத்து தீவிரவாதிகள் இந்தியாவுக்கு கடத்தி வந்ததாக விசாரணையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட ரசாயனங்கள் அடங்கிய வெடிப்பொருளை கடத்தி வந்த 13 தீவிரவாதிகள் இந்திய எல்லையில் ஊடுருவியதாகவும், பின்னர் அந்த வெடிப்பொருள் பூஞ்ச் பகுதியில் இருந்து சோபியான் மாவட்டத்திற்கு கடத்திச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வெடிகுண்டுகள் தயாரிப்பதில் தேர்ச்சி பெற்ற காம்ரானும், ghazi -யும் துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.