காஷ்மீர் தீவிரவாதிகள் மீண்டும் பெரிய தாக்குதலை நடத்த திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை

இந்திய பாதுகாப்பு படையினருக்கு கடுமையான உயிர்ச்சேதம் ஏற்படுத்தும் வகையில் மீண்டும் மிகப்பெரிய தாக்குதல் நடத்த ஜெய்ஷே முகமது தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
அண்மையில் காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தால் நாடே கொதிப்படைந்து காணப்படும் சூழலில் இந்த எச்சரிக்கை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று தற்கொலைப்படைத் தீவிராதிகள் உள்பட 21 தீவிரவாதிகள் இதற்காக சதித்திட்டம் தீட்டி வருவதாகவும் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்ட உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதல் ஜம்மு காஷ்மீரில் நடைபெறுமா அல்லது வேறு ஒரு முக்கிய நகரில் நடைபெறுமா என்பது குறித்த தகவல் இல்லை.
இந்த எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்பு படையினர் முழு விழிப்புணர்வுடன் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர்
பாலிமர்

Leave a Reply

Your email address will not be published.