பாகிஸ்தான் எல்லை அருகே பொக்ரானில் விமானப்படை போர்ப்பயிற்சி
தன்னிடம் உள்ள அனைத்து வகை போர்விமானங்கள் மற்றும் வானூர்திகளை கொண்டு தனது பலத்தை வெளிப்படுத்தும் வகையில் விமானப்படை பாகிஸ்தான் எல்லை அருகே போர்ப்பயிற்சி நடத்தி வருகிறது.
புல்வாமா தாக்குதல் நடைபெற்று
44 CRPF வீரர்கள் வீரமரணம் அடைந்த இரு நாட்கள் கழித்து இந்த பயிற்சி நடைபெறுகிறது எனினும் இது ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.
வாயு சக்தி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பயிற்சியில் Light Combat Aircraft (LCA) Tejas, Advanced Light Helicopter (ALH) மற்றும் Akash surface-to-air missile மற்றும் Astra air-to-air missile ஆகியவை பங்கு பெற்றன.
இரவிலும் பகலிலும் போர்விமானம் மற்றும் வானூர்திகள் இலக்கை தாக்கி அழித்தன.த்ருவ் மற்றும் Akash போர்பயிற்சியில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.தவிர upgraded MiG-29 fighter விமானமும் பயன்படுத்தப்பட்டது.
Su-30s, Mirage 2000s, Jaguars, Mig-21 Bison, Mig-27, Mig-29, IL78, Hercules, AN-32 aircraft என 137 விமானங்கள் பங்கேற்றன.