இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் ராணுவமே உரிய இடத்தையும், நேரத்தையும் தேர்வு செய்யலாம் என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.
இந்திய மேற்கொண்ட பயங்கரவாத முகாம் தாக்குதலுக்கு பின்னர், தேசிய பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தை கூட்டி இம்ரான்கான் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
தாக்குதலுக்கான நேரம், இடம் ஆகியவற்றை ராணுவமே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பாவத் உசேன், இந்திய படங்களை திரையிடவும், இந்திய விளம்பரங்களை ஒளிபரப்புவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.