போர் அச்சத்தில் பாகிஸ்தான்- மருத்துவமனைகள் தயார் நிலை

இந்தியா போர்த் தொடுக்கலாம் என்ற அச்சம் காரணமாக மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்கும்படி அரசு அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் ஜிலானி மருத்துவமனைக்கு எழுதியுள்ள கடிதத்தில் போர்ச்சூழல் ஏற்பட்டால் மருத்துவ உதவிகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் 25 சதவீத இடங்களை ராணுவத்தினருக்காக ஒதுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் அதிரடித் தாக்குதல் நடத்தலாம் என ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள மக்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பாலிமர்

Leave a Reply

Your email address will not be published.