இந்தியாவின் எந்த தாக்குதலுக்கும் தயார் : முழு வீச்சில் பதிலடி கொடுக்கப்படும்” – பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் எச்சரிக்கை

இந்தியா எந்த மாதிரியான தாக்குதல் நடத்தினாலும், அதற்கு முழு வீச்சில் பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. சம்மந்தப்பட்டிருப்பதாக இந்திய ராணுவ தளபதி சமீபத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் ராவல்பிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அசீப், போர் தொடங்க பாகிஸ்தானுக்கு விருப்பமில்லை என்றார். ஆனால், இந்தியா ஏதாவது தாக்குதல் நடத்த திட்டமிட்டால் அதற்கு முழுவீச்சில் பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தயாராக உள்ளதாக அசீப் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.