புல்வாமா தாக்குதல்: வெடிப்பொருட்களை ஆய்வு செய்யும் தேசிய புலனாய்வு அமைப்பு

புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிப்பொருட்களை தேசிய புலனாய்வு அமைப்பு ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகிவுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளால் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றன. ஜெயிஷ் இ முகம்மது அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இதனையடுத்து பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆலோசனை நடத்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் உள்ள ராஜ்நாத் சிங் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாட்டின் முக்கிய புலனாய்வு அமைப்பான் ரா, உளவுத்துறை அமைப்பு அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் மத்திய உள்துறை செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் காஷ்மீர் தாக்குதல் மற்றும் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிப்பொருட்கள் எங்கிருந்து தயாரிக்கப்பட்டது என்று தேசிய புலனாய்வு அமைப்பு ஆய்வு செய்வதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. தடையவியல் நிபுணர்கள் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆர்டிஎக்ஸ் வெடிப்பொருளிலுள்ள ரசாயனம் பற்றி ஆய்வு செய்வதாக தெரியவந்துள்ளது.

மேலும் தேசிய புலனாய்வு அமைப்பின் ஒரு குழுவும் தேசிய பாதுகாப்பு படையின் மற்றொரு குழுவும் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் விசாரனை செய்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்து கிடைத்த ஆவணங்கள் மத்திய தடையவியல் துறையின் ஆராய்ச்சி கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.