பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதை அடுத்து, அணு ஆயுத பிரயோகம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கும் ஆணையத்தின் கூட்டத்திற்கு பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் நேற்று நடைபெற்ற அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில் பாகிஸ்தானின் தேசிய அணுசக்தி ஆணையத்தின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.