இரு நாள் பயணமாக நாகலாந்து சென்ற தளபதி ராவத்
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவர்கள் இரு நாள் பயணமாக நாகலாந்து சென்றுள்ளார்.இதற்காக Rangapahar Military Station சென்ற அவர் அந்த பகுதியில் பணியில் உளாள இராணுவத்தின் தயார் நிலை குறித்து பார்த்து அறிந்தார்.
முன்னதாக இராணுவத் தளபதியை Lieutenant General MM Naravane, General Officer Commanding-in-Chief Eastern Command வரவேற்றார்.தளபதிக்கு Lieutenant General Rajeev Sirohi, General Officer Commanding Spear Corps அவர்கள் நிலையை எடுத்து விளக்கினாய்.
வடகிழக்கில் இராணுவம் பயங்கரவாத எதிர்ப்பு ஆபரேசன்களில் ஈடுபட்டு வருகிறது.மேலும் இந்த ஸ்பியர் கார்ப்ஸ் தான் Line of Actual Control (LAC) in Arunachal Pradesh நடக்கும் ஆபரேசன்களுக்கும் பொறுப்பு.
சீனா எல்லையில் இராணுவத்தின் தயார் நிலை மற்றும் ஸ்பியர் கார்ப்சின் பயங்கரவாத எதிர்ப்பு ஆபரேசன்கள் குறித்து திருப்தி தெரிவித்த தளபதி ,அந்த பகுதியில் அமைதியை நிலைநாட்ட வீரர்கள் செய்யும் பணிகளை பாராட்டினார்.
மேலும் கடினமான பகுதியில் ஆபரேசன்கள் மேற்கொள்ளும் வீரர்களை பாராட்டினார்.
மேலும் ஸ்பியர் கார்ப்சின் இராணுவ அதிகாரிகளுடன் உரையாடிய அவர் ஆபரேசனை முடிக்க அயராது உழைக்கும் வீரர்களுக்கு புத்துணர்வு வார்த்தைகள் கூறினார்.