Breaking News

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊருவிய பெண் துப்பாக்கி சூட்டில் காயம்

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊருவிய பெண் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்துள்ளார்.

புல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் எல்லையை ஒட்டியப் பகுதியில் இந்திய ராணுவம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான நகர்வுகளை துல்லியமாக ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தேரா பாபா நானக் செக்டாரில் இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானிய பெண் ஒருவர், எல்லைப் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தார். அவர் உடனடியாக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருடைய காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, விசாரணையும் நடைபெற்று வருகிறது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய எல்லைக்குள் நுழைந்த பெண்ணை பலமுறை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் அவர் காதில் வாங்காமல் உள்ளே வந்துள்ளார். இதனையடுத்து பாதுகாப்பு விதிமுறைகளின்படி வீரர்கள் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.