இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், எல்லையில் அமைந்துள்ள இந்திய விமானப்படை தயார் நிலையில் இருக்கும்படி பாதுகாப்புத்துறை அறிவுறுத்தி உள்ளது.

கடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது. இந்நிலையில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பால்கோட் என்ற இடத்தில் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு 12 மிராஜ் 2000 ஜெட் விமானங்கள் எல்லை தாண்டிச்சென்று சுமார் 1000 கிலோ வெடிகுண்டை பயங்கரவாதிகள் முகாம் மீது வீசி அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

 ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாலகோட் பகுதியில் நடந்த தாக்குதலில் ஜெயிஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம் அழிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 200- 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஆங்கில தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளது. ஜெயிஷ் இ பயங்கரவாத அமைப்பின் 3 கட்டுப்பாட்டு அறைகள் சேதமடைந்ததாகவும், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாலகோட், முசாபர்பாத், சக்கோட்டி பகுதிகளில் நடந்த தாக்குதலில், பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், எல்லையில் அமைந்துள்ள இந்திய விமானப்படை தயார் நிலையில் இருக்கும்படி பாதுகாப்புத்துறை அறிவுறுத்தி உள்ளது.

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், உடனடி பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய வான் பாதுகாப்பு தடுப்பு அமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு, இந்திய விமானப்படை அறிவுறுத்தியிருக்கிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டியுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். 
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருப்பதால், அந்நாட்டின் விமானப்படையும், இந்தியாவிற்கு புகுந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, எல்லைப் பகுதியில் உள்ள, இந்திய வான் தடுப்பு அமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு, இந்திய விமானப்படை அறிவுறுத்தியிருக்கிறது.

பாகிஸ்தான் விமானப்படை எந்தநேரத்திலும் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதால், காஷ்மீர், பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களை ஒட்டி அமைந்திருக்கும் எல்லைப்பகுதியிலும், இவற்றின் அண்டை மாநில பகுதிகளிலும், இந்திய பாதுகாப்புப்படைகளின் வான் தடுப்பு அமைப்புகளை, தயார் நிலையில் வைக்குமாறு, இந்திய விமானப்படை சுட்டிக்காட்டியிருக்கிறது.
Thanthi

Leave a Reply

Your email address will not be published.