போர் விமானங்கள், ராணுவ வாகனங்களுக்கு 500 டேங்கர் லாரிகளில் எரிபொருள் விரைகிறது

பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், போர் விமானங்கள் மற்றும் ராணுவ வாகனங்களுக்கு எரிபொருள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடி திட்டம் வகுத்துள்ளன.

காஷ்மீர் மாநிலத்திலும், பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இதர மாநிலங்களிலும் எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் உள்ளன.
அங்கு விமான எரிபொருள் மற்றும் டீசலை நிரப்புவதற்காக 500 டேங்கர் லாரிகளில் எரிபொருள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போதிய நாட்களுக்கு தேவையான அளவுக்கு எரிபொருள் நிரப்பப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.