ராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி -நிர்மலா சீதாராமன்
மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் 424 தனியார் நிறுவனங்களுக்கு ராணுவ தளவாடங்கள் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே நடைபெறும் இந்திய விமான கண்காட்சி தொடக்க விழாவில் பேசிய அவர் இதனை கூறினார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 228 விமானங்கள் ஆப்கானிஸ்தான், மொரீசியஸ், மாலத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
6 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, 237 கோடி ரூபாய் முதலீட்டில் ராணுவ தளவாடங்கள் தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறிய நிர்மலா சீதாராமன், இந்நிறுவனங்கள் தயாரித்த துப்பாக்கிகள், ஹெலிகாப்டர்கள், ராடார் கருவிகள் உள்ளிட்டவற்றின் பட்டியலையும் வெளியிட்டார்.