காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா தளபதி உள்ளிட்ட 2 பேர் சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்காம் மாவட்டத்தில், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் முக்கிய தளபதி உள்ளிட்ட இரு தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
பத்காம் மாவட்டம் கோபால்போரா என்ற பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து இன்று அதிகாலை அங்கு விரைந்த வீரர்கள், கோபால்போரா பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது வீரர்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தவே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
முடிவில் இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவன் லஷ்கர் இ தொய்பாவின் முக்கிய தளபதி அபு மாஸ் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.