ஆபத்தான அணுஆயுத நீர்மூழ்கி படையை கட்டமைக்கும் இந்தியா
இந்தியா Deadly Force of Nuclear-Missile Submarines படையை கட்டமைத்து வருகிறது.
கடந்த நவம்பர் 4, 2018 அன்று இந்திய பிரதமர் மோடி அரிகந்த் தனது முதல் ரோந்தை வெற்றிகரமாக முடித்ததாக அறிவித்தார்.அரிகந்த் இந்தியா மேம்படுந்திய nuclear-powered submarine ஆகும்.அரிகந்த் என்பதற்கு “Slayer of Enemies” அதாவது எதிரிகளை அழிப்பவன் என்று பொருள்.அரிகந்த் uranium-fueled pressurized light-water reactor ஐ தனது சக்திக்காக பயன்படுத்துகிறது.இந்த ரியாக்டர் 83-megawatts அளவு சக்தியை தயாரிக்கிறது.24 knot வேகத்தில் உணவு சப்ளை பொருத்து பல மாதங்களுக்கு நீருக்கடியில் நீந்தக்கூடியது.
அதன் நான்கு vertical launch tubes வழியாக K-15 Sagarika (“Oceanic”) அணுஆயுத ஏவுகணைகளை ஏவ முடியும்.நீருக்கடியில் ஏவப்பட்டு எதிரியின் நகரங்கள் அல்லது இராணுவ தளங்களை அழிக்க வல்லது.
இந்தியாவின் அதிநிதி திட்டம் (most expensive defense program) அதாவது 13 பில்லியன் திட்டத்தில் இந்த அரிகந்த் வரிசை நீர்மூழ்கிகள் மேம்படுத்தப்பட்டு கட்டப்பட்டுவருகிறது. Advanced Tactical Vessel program என்ற திட்டம் 1990களில் தொடங்கியது.
இரஷ்யா உதவியுடன் அரிகந்த் வடிவமைக்கப்பட்டது.இது இரஷ்யாவின் Akula-class attack submarine அடிப்படையாக கொண்டு மேம்படுத்தப்பட்டது.அகுலா வகை நீர்மூழ்கி இரஷ்யா இயக்கும் சத்தம் குறைவான நீர்மூழ்கி என்பது கூடுதல் தகவல்.
இந்தியா தற்போது இரஷ்யாவிடம் இருந்து Akula-class Chakra II என்ற நீர்மூழ்கியை குத்தகைக்கு எடுத்துள்ளது.
இந்தியா எதிரி நீர்மூழ்கிகளை அல்லது கப்பல்களை தேடி வேட்டையாடும் attack நீர்மூழ்கிகளை கட்டாமல் nuclear-powered ballistic missile submarine (SSBN or “boomer”) கட்டி வருகிறது.
ஏனெனில் கடற்பரப்பில் இருந்து நிலத்தை தாக்கும் இந்த nuclear-powered submarine-கள் பல மாதங்களுக்கு நீரிலேயே மூழ்கியிருந்து எதிரிகள் மீது அணுஆயுத தாக்குதல் நடத்தும்.இந்தியா ” No first use policy” எனப்படும் முதலில் தாக்குவதில்லை என்ற கொள்கையை கொண்டுள்ளது.எதிரி முதலில் நம்மை தாக்கினால் நாம் இரண்டாவது தாக்குதல் நடத்துவதை உறுதிப்படுத்துவதற்காக தான் நீர்மூழ்கிகள் கட்டப்படுகின்றன.
அரிகந்த கடந்த 2009 லிலேயே கடலில் ஏவப்பட்டாலும் ஏழு வருடங்களுக்கு testing மற்றும sea trials-களில் இருந்தது.அதன் பின் August 2016ல் தான் படையில் இணைந்தது.
ஆனால் நான்கு மாதங்களுக்கு பிறகு ஒரு விபத்து ஏற்பட்டது.கவனக்குறைவாக நீர்மூழ்கியின் hatch எனப்படும் மேற்கதவு மூடப்படாமல் விட்டுவிட்டதால் கடற்தண்ணீர் நீர்மூழ்கிக்கள் புதுந்துவிட்டது.இதற்காக நீர்மூழ்கியின் டியூப்கள் மாற்ற 10 மாதங்கள் பிடித்தது.மற்றும் அதன் காரணமாக ரோந்து தமதமாகியது.
அரிகந்த் தனது முதல் ரோந்தை முடித்தாலும் sea-based nuclear deterrence வலுப்படுத்த இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம்.
அரிகந்தில் உள்ள 10மீ நீளமுடைய கே-15 missiles ஏவுகணை 430 மைல்கள் தூரம் செல்லக்கூடியது.இதால் உள் பாகிஸ்தானிய பகுதிகளை தாக்க முடியாது.அதன் தலைநகரான இஸ்லாமாபாத் உட்பட..இந்திய கடலில் இருந்து ஏவப்பட்டால் சீன இலக்குகளையும் தாக்காது
இதற்காகவே twelve-meter tall K-4 Shaurya SLBM ஐ டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ளது.இது 2,100 miles மைல்கள் வரை செல்லக்கூடியது.2020 வாக்கில் படையில் இணையும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
K-4 படையில் இணையும் பட்சத்தில் பாகிஸ்தான் மற்றும் சீன நிலைகளை நாம் தாக்கலாம்.
இந்தியா தற்போது Arihant-class submarine-ஆன அரிகத்தை விரைவில் படையில் இணைக்க உள்ளது.அதாவது 2019-2021 வாக்கில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரிகத் powerful reactor ஐ கொண்டிருக்கும் எனவும் அரிகந்தை விட இருமடங்கு ஏவுகணைகளை சுமக்கும்.அதாவது twenty-four K-15 missiles or eight K-4s.
இதன் பிறகு இரு முதல் நான்கு அரிகந்த் வகை நீர்மூழ்கியை கட்டத் தொடங்கியுள்ளது. S4 மற்றும் S4* எனப்படும் இடை 3,000-mile-range K-5 missilesகளை சுமக்கும.
2022ல் இந்திய கடற்படை தனது nuclear submarine படைத்தளமான INS Varsha-வின் கட்டுமானத்தை முடிக்கும்.இது இந்தியாவின் central-eastern coastல் அமைக்கப்படுகிறது.இங்கிருந்து தான் இனி நமது அணுஆயுத நீர்மூழ்கிகள் இயங்கும்.