காலக்கெடுவுக்கு நான்கு மாதங்கள் முன்னரே 1 லட்சம் குண்டு துளைக்காத கவசங்களை பெறும் ராணுவ வீரர்கள் !!

  • Tamil Defense
  • January 7, 2021
  • Comments Off on காலக்கெடுவுக்கு நான்கு மாதங்கள் முன்னரே 1 லட்சம் குண்டு துளைக்காத கவசங்களை பெறும் ராணுவ வீரர்கள் !!

மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சுமார் 1.8 லட்சம் அதிநவீன குண்டு துளைக்காத பாதுகாப்பு கவசங்களை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை எஸ்.எம்.பி.பி நிறுவனத்திற்கு வழங்கி இருந்தது.

இந்த நிலையில் எஸ்.எம்.பி.பி நிறுவனம் சுமார் 1 லட்சம் குண்டு துளைக்காத கவசங்களை முதல் தொகுதியாக நான்கு மாதங்கள் முன்னரே டெலிவரி செய்ய துவங்கி உள்ளது.

இந்த கவசங்கள் மிகவும் ஆபத்தான ஏகே47ன் ஸ்டீல் கோர் புல்லட்களை தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.