இந்திய பெருங்கடல் பகுதியில் 1800கிமீ வரம்பு கொண்ட பலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை ஈரான் செய்துள்ளது.
இந்த போர் ஒத்திகையில் எதிரி கடற்படை இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையிலான பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக முக்கிய ஈரான் ராணுவ தளபதி தெரிவித்தார்.
ஈரானிய ராணுவ தலைமை தளபதி முன்னிலையில் இந்த பயிற்சி நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.