ஹரியானாவின் ரோடக் என்னுமிடத்தில் 13 ஜனவரி 1978 இரவு 10.30 மணி அளவில் பிறந்தது அந்த வீரக்குழந்தை.அவரது பெற்றோரான ராஜேந்திர பிரசாத் மற்றும் சுசிலா சர்மா அவர்களின் இரண்டாவது குழந்தையாக உதித்தார் மேஜர்.அவரது குடும்பத்தார் அவரை செல்லமாக “சிண்டு” எனவும், அவரது நண்பர்கள் அவரை “மைக்” எனவும் அழைத்தனர். அவர் மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகன்,கிட்டார் நன்றாக வாசிப்பார். டெல்லியில் உள்ள மனவ் ஸ்தலி பள்ளியில் படிப்பை தொடங்கிய அவர், பிறகு 1988ல் காசியாப்பாத்தில் உள்ள பள்ளியில் […]
Read Moreபாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி இன்று தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய விமானப்படைக்கான தேஜாஸ் போர் விமான ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்தது. அதன்படி சுமார் 48,000 கோடி ருபாய் மதிப்பில் 83 தேஜாஸ் போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளன, 73 தேஜாஸ் மார்க் 1ஏ போர் விமானங்களும் , 10 தேஜாஸ் மார்க்1 போர் விமானங்களும் வாங்கப்பட உள்ளன. இந்த போர் விமானத்தில் FLYBY WIRE MID AIR REFUELLING BVR Electronic Warfare Suite AESA RADAR […]
Read Moreகடந்த வருடம் ஜூன் 15ஆம் தேதி லடாக் மாநிலம் கல்வான் பள்ளதாக்கில் அத்துமீறி நுழைந்த சீன படையினருடன் நமது தரைப்படையின் 16ஆவது பிஹார் வீரர்கள் சண்டையிட்டனர். இந்த நடவடிக்கையை இந்திய தரைப்படை ஆபரேஷன் ஸ்நோ லெப்பர்ட் என அழைப்பது குறிப்பிடத்தக்கது. அந்த மோதலில் அப்பிரிவின் கட்டளை அதிகாரி கர்னல் சந்தோஷ் பாபு மற்றும் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்கள் அனைவரின் பெயரும் தில்லி தேசிய போர் நினைவகத்தில் பொறிக்கப்பட்டு உள்ளன, மேலும் லேயில் உள்ள 120ஆவது […]
Read More2021ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு பட்ஜெட் இந்திய ராணுவத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தின் தீவிரத்தை பிரதிபலிப்பதாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏனெனில் அடுத்த 5 ஆண்டுகளில் தன்னிறைவு எனும் இலக்கை நோக்கி பாதுகாப்பு படைகள் பயணிக்க உள்ளதாக அரசு தரப்பு கூறுகிறது. ஆகவே பாதுகாப்பு பட்ஜெட் சுமார் 85.71 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 6லட்சம் கோடி ருபாய்களை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் நமது பாதுகாப்பு பட்ஜெட் 3.37 லட்சம் கோடிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Read Moreநேற்றைய தினம் இந்திய கடற்படை நம் நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய கடலோர பாதுகாப்பு ஒத்திகை பயிற்சியை தொடங்கி உள்ளது. சுமார் 7500 கிலோமீட்டர் நீளம் கொண்ட நம் நாட்டின் ஒட்டுமொத்த கடற்கரை பகுதிகளையும் இது உள் அடக்கிய பயிற்சி ஆகும். இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை, சுங்க இலாகா மற்றும் மாநில கடலோர காவல்துறைகள் இதில் பங்கு பெற உள்ளன. மேலும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், கப்பல் மற்றும் துறைமுகங்கள் அமைச்சகம், பெட்ரோலியம் […]
Read Moreஇந்திய தரைப்படை தினம் வருகிற 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது, இதையொட்டி தலைநகர் தில்லியில் தரைப்படை தளபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேசிய பாதுகாப்பு பற்றிய கேள்விக்கு பதில் அளித்த தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே, “சீனா பாகிஸ்தான் இடையே ராணுவ ரீதியான மற்றும் பிற ஒத்துழைப்புகள் பெரிய அளவில் அதிகரித்து உள்ளதாகவும், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கொள்கையின் ஒரு பகுதியாக பயன்படுத்தி வருவதாகவும் அதை இந்தியா சமாளிக்கும் எனவும் கூறினார். மேலும் பேசுகையில் […]
Read Moreசட்டீஸ்கர் மாநில காவல்துறையின் அதிரடி படை வீரர்கள் குறிப்பிட்ட பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த போது கண்ணிவெடி வெடித்தது. இதில் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர் அவர்கள் உடனடியாக தலைநகர் ராய்ப்பூர் கொண்டு செல்லப்பட்டனர். தற்போது அவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என அம்மாநில காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
Read Moreமும்பை கடற்படை தளம் இந்திய கடற்படையின் மேற்கு கட்டளையக தலைமையகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஐ.என்.எஸ் பெட்வா போர்க்கப்பலில் பணியாற்றி வந்த 22 வயதான வீரர் ரமேஷ் சவுதரி இறந்த நிலையில் காணப்பட்டார். அவர் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அருகே துப்பாக்கியும் இருந்தது, மேலும் அவரது சகா கூறுகையில் அன்று காலை முதலே ரமேஷ் வருகை பதிவேட்டில் கையெழுத்து இட வரவில்லை என்றார். ஆகவே அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று […]
Read More